search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மின் நிறுத்தம்"

    திண்டல் - மேட்டுக்கடை ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவாநகர், முத்தம் பாளையம், ஹவுசிங்யூனிட், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜிகார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், மாருதி நகர், வித்யா நகர்,

    வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளைய கவுண்டன் பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராயாபாளையம்,

    சிந்தன்குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல் நகர் பகுதி, முத்து மாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம், வேலப்ப கவுண்டன் வலசு மற்றும் முனியப்பன் பாளையம்.

    ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் பழனிவேல் இதனை தெரிவித்துள்ளார்.

    ×